- Advertisement -
சென்னையில் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை இன்று (மே 16) காலை 8 மணி முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு சென்னையில் உள்ள தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த ரெய்டு குறித்து கேட்டபோது, இந்த லைகா நிறுவனத்தில் சில சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை ரகசிய புகார் வந்ததின் அடிப்படையில் இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது என்றனர். மேலும், இந்த சோதனையின் போது துணை ராணுவத்தின் பாதுகாப்போடு நடத்தி வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -