பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் அமைந்துள்ள 120 அடி உயரம் கொண்ட பனைமரத்தின் மீது ஏறி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது போதை உச்சிக்கு ஏறி அங்கேயே படுத்து உறங்கி உள்ளார். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை வந்து அவரை அழைத்தும் உறங்கிருந்த அவரை எழுப்ப முடியாமல் திணறி உள்ளனர்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து கயிறு கட்டியும் கீழே வலைவிரித்தும் அந்த நபரை மீட்க முயற்சித்தனர். ஆனால், இந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதற்கு பின் இரும்பு குண்டு பொருத்தப்பட்ட கிரேன் வந்து, அதன்மூலம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஏறி பனைமரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்தவரை லாபமாக தூக்கி கீழே கொண்டு வந்தனர்.
இதில் அவரை மீட்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலும் போராடினர். இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்