தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் வளிமண்டலம் ஏற்பட்ட காற்றின் ஈரப்பததால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதைபோல், வங்கக்கடலில் வந்த மோக்கா புயல் பெரிதாக வெயில் தாக்கம் தெரியவில்லை. இதில் கடந்த மே 4 ஆம் தேதியில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று புயல் மியான்மரில் கரையை கடந்தது. தற்போது இந்த புயலால் காற்றின் ஈரப்பதம் முழுவதும் உறுஞ்சியதாலும், கோடை கால வெயில் தாக்கத்தாலும் நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100 டிகிரி மேல் வெப்பம் பதிவானது.
இதில் சென்னையில் நேற்று 105 டிகிரி வெப்பம் நுங்கப்பாக்கத்தில் பதிவானது, வேலூரில் 107 டிகிரி வெப்பம் பதிவானதால், மக்கள் யாரும் நண்பகல் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (மே 15) சென்னையில் 2வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இது நண்பகல் 12 மணியளவில் சென்னையில் வெயிலின் அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார்.