- Advertisement -
விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. அதனால், இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் காலை நிலவரப்படி 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தனர். பின்னர் மீதி பேருக்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், மேலும் 2 பேர் பலியானர்
இந்நிலையில், இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயன் (66) என்பவருக்கு தற்போது உயிரிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -