தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு நாள் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி சென்றுள்ளார். அங்கு இவர் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார். இதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை பற்றி பேசுவதற்காக தான் இந்த பயணம் மேற்கொண்டார், பின்னர் திரௌபதி முர்முவிடம் விடைகொடுக்கும் போது கிண்டியில் திறக்கப்படும் மருத்துவமனைக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.
பின்னர் டெல்லி விமான நிலையத்திற்க்கு சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்தார். இந்நிலையில், இந்த விமான நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பின்னர் இவர்கள் இருவரும் சில விஷியங்கள் பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.