தமிழகத்தில் இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் வந்த தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பல பண்டிகைகளால் வார இறுதியில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், ட்ரெயின் , விமானம் போன்றவற்றின் மூலம் முன்பதிவு செய்து தொடர் விடுமுறை மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வரும் மே 1ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) உழைப்பாளர் தினம் முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும், அதைபோல் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்களுக்கு சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளனர். இதன் காரணமாக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது ஊருக்களுக்கு செல்ல இப்போதே பேருந்து மற்றும் ரயில்களில் பயணசீட்டு பெற முன்பதிவு செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.