தமிழ் கடவுள் மற்றும் ஈசனின் மைந்தனான முருகன் பெருமானுக்கு தமிழக்தில் பல கோயில்கள் உள்ளன. அதிலிலும் குறிப்பாக அறுபடை வீடுகள் உள்ளன. அவை பழனி, ஸ்வாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் ஆகும். இந்த முக்கிய ஸ்தலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த இழுவை ரயில்லில் குறிப்பிட்ட 40 பயணிகள் வரை செல்லலாம். ஆனால் தற்போது இந்த ரயிலில் குளிர்சாதன வசதி, டிவி போன்ற அதிநவீன வசதியுடன் கூடிய 2 பெட்டியை இணைத்துள்ளது கோயில் நிர்வாகம்.
இதன் காரணமாக, இனி இந்த மின் இழுவை ரயிலில் 72 வரை பயணம் செய்யலாம் என்று தெரிவித்தனர். இந்த பயன்பாடு விரைவில் வரப்போவதாக கோவில் நிர்வாகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.