தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் அனைத்து வகுப்புகளுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளும் மார்ச் மாதம் தொடங்கிய பொது தேர்வுகள் ஏப்ரலுக்குள் நிறைவடைந்ததையடுத்து, மற்ற வகுப்புகளான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 11ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் இந்த ஆண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு மாணவர்களுக்கு நாளை (29-04-2023) முதல் கோடை விடுமுறை ஆரம்பிக்கவுள்ளது. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்க என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.
அதைபோல். LKG முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-வது வாரம் வெயிலின் தாக்கம் இல்லாதபோது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.