Wednesday, June 7, 2023 5:54 pm

இன்றுடன் தேர்வுகள் முடிந்ததால் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் அனைத்து வகுப்புகளுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளும் மார்ச் மாதம் தொடங்கிய பொது தேர்வுகள் ஏப்ரலுக்குள் நிறைவடைந்ததையடுத்து, மற்ற வகுப்புகளான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 11ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் இந்த ஆண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு மாணவர்களுக்கு நாளை (29-04-2023) முதல் கோடை விடுமுறை ஆரம்பிக்கவுள்ளது. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்க என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

அதைபோல். LKG முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-வது வாரம் வெயிலின் தாக்கம் இல்லாதபோது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்