தமிழகத்தில் பொதுவாக கோடை காலம் ஆரம்பித்தால் போதும் மாணவர்களுக்கு விடுமுறை நீண்ட நாள் வழங்கப்படும். அதே வகையில், மே மாதம் தொங்கியது முதல் உயர் நீதிமன்றத்திற்கு சில ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த கோடை காலங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் அந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் அமர்த்தப்படுவார்கள்.
ஆகவே, இந்த சிறப்பு நீதிபதி அமர்வு தான் இந்த கோடை காலங்களில் வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவர். இது தான் தற்போது உள்ள நடைமுறை. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வெயில் காலத்தில் விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகள் யாரென முழு லிஸ்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்டில் முதலாவதாக தலைமை நீதிபதி ராஜா உட்பட 29 நீதிபதிகள் இந்த கோடை காலத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிப்பார்கள். மேலும், மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மனுதாக்கல் மட்டும் பெறப்படும். பின்னர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் அந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என கூறியுள்ளனர்.
அதைபோல், மற்ற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுதாக்கல் பெறப்பட்டு, புதன் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் அந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.