தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். ஏனென்றால் தமிழக ஆளுநரின் செயல்பாட்டையும் அதனால் ஏற்படும் சர்ச்சைகள் குறித்து ஆலோசிக்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு அவரை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மரியாதையை சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அங்குள்ள தமிழக அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வரை, அங்கிருந்த டெல்லி பாதுகாப்பு பு படையினரின் மரியாதையை ஏற்றதற்கு பிறகு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு தனது மரியாதையை செலுத்தினார். அதற்கு பின் இன்று காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், அவர் வருகின்ற கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாக்கு வருகை தருமாறு அழைப்பிதழையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.