தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சில இடங்களில் ஏற்படும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்து மக்கள் மனதை குளிர்வித்து வருகிறது. அதைபோல், கடந்த சில நாட்களாக மேற்கு மாவட்டம் ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்கிறது என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று சென்னையில் வானிலை ஆய்வாளர் அவர்கள் நிருபர்களை சந்தித்து தமிழகத்தில் வருகின்ற ஏப் 30, மே 1 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்றும், அதைபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளனர்.