தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து ஆசிரியர்களுக்கு பணியிடை மாற்றம் செய்ய பொது மாறுதல் கலந்தாய்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த 2022-2023 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகின்ற மே 8ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்தாய்வில் இன்று முதல் அனைத்து ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அப்படி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிந்து 1 வருடம் முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தற்போது தளர்த்துவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் அவர்களது விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு நிர்வாக மாறுதல், பணி நிரவல் என எந்த மாறுதல் வகை வேண்டும் என்பதற்கு வேண்டிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இதற்கான பட்டியல் வருகின்ற மே 3ம் தேதி வெளியிடப்பட போவதாக என்று சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது