தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலம் ஆரம்பித்ததையொட்டி பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். ஆனால். சில இடங்களிலும் வெப்பம் சலனத்தால் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கங்கே குளிர்ச்சி நிலை உருவாகியுள்ளது மக்களை சந்தோசப்படுத்தியுள்ளது. அதிலிலும் குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் மேற்கு மாவட்டமான நெல்லையில் சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக, அங்கு குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதைபோல், இந்த கனமழையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் புகுந்தது என தகவல்கள் வெளிவந்துள்ளது.