தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தற்போது தேர்வு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்கள் எழுதிய பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று நேற்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஏனென்றால், மே மாதத்தில் நடைபெறும் நீட் தேர்வால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் தேதி மாற்றப்படும் என்றும், அதை பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினர். ஆனால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்றன மே மாதம் 8 ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கு முதல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் பார்த்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது