தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்கு பின் இவரது சொந்தமான கோடநாடு பங்களாவில் திடீரென அடுத்தடுத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து விசாரித்த காவலர்கள் இங்கு கடந்த 5 ஆண்டுகளாக இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணை முடிவில் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கனகராஜ் என்பவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து வந்ததாகவும் அவருக்கு கண்டம் இருந்ததாகவும், பின்னர் தான் அவர் உயிரிழந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து இனி சிபிசிஐடி ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவையும், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி ஆகியோரிடமும் வரும் மே முதல் வாரத்தில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.