- Advertisement -
தமிழரின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை
நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். அது வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் இந்த ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்
- Advertisement -