தமிழகம் , கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியை எதிர்த்து விலங்கு நல அமைப்பான பீட்டா அமைப்பு, இந்த போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு ஜல்லிக்கட்டு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த போது, ஜல்லிக்கட்டில் பாதுகாப்பான முறையிலும், விலங்குகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்துவதாக ஆதாரத்துடன் கோர்ட்டில் பதிலளித்தது தமிழக அரசு. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் 5 பேரு கொண்ட அமர்வில் ஒரே மனதாக, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21-ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை. மேலும் இந்த அரசமைப்பு சட்டத்தின் 51A பிரிவுக்கு எதிரானது இல்லை என உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.