- Advertisement -
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாளை (மே 19) பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை (மே 19) காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது என தெரிவித்தனர். மேலும், இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in என்ற இரு இணையதளத்திலும் மாணவர்கள் அவர்க்ளின் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என அறிவித்தனர்.
- Advertisement -