- Advertisement -
நேற்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளுத்து வாங்கிய மழை பெய்தது. பல இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் இன்று (நவ 27) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மழையால், சென்னையின் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -