- Advertisement -
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 23) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 24) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தாலுக்காகளிலும், மழைநீர் தேங்கி, சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த விடுமுறைக்கு மற்ற தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -