தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (23 நவம்பர் 2023) மாலை பின்வரும் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர் , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்போது, மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்குக் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அது, வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மின்சாரக் கம்பிகளிலிருந்து விலகி இருங்கள், மரங்கள் மற்றும் கட்டிடங்களின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.