- Advertisement -
பாஜக கூட்டணியைத் தொடர்வதா? முறித்துக் கொள்வதா? என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தனக்கு நெருக்கமான, 2ம் கட்ட தலைவர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் அதிமுக – பாஜக இடையே பிரச்சனை இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறிவருவதால், இபிஎஸ் குழப்பத்தில் உள்ளார். இந்நிலையில், தற்போது இந்த ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுவதால் முடிவெடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால், இன்று மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு, பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது
- Advertisement -