- Advertisement -
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று (செப் .15) தொடங்கப்படுகிறது. அதன்படி, 1.06 கோடி மகளிர் பயன் பெறவுள்ள இத்திட்டத்தைத் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதை வரவேற்கும் விதமாகவும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் வீட்டின் முன் கோலமிட்டு பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
- Advertisement -