சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கியதால் சிக்கிக்கொண்டார்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஷு நகரில் உள்ள ஒரு வீட்டில், யாங் என்ற 27 வயதான நபர் திருட சென்றார். வீட்டிலிருந்தவர்கள் விழித்துக்கொண்டு இருந்ததால், அவர்கள் தூங்கியதும் திருடலாம் என எண்ணி, புகைப்பிடிக்க தொடங்கினார்.
ஆனால், புத்தகத்தைப்பிடிப்பதால் அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அயர்ந்து தூங்கிவிட்டார். வீட்டின் உரிமையாளர் யாங் தூங்குவதைக் கவனித்து, போலீசுக்கு தகவல் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து யாங்கை கைது செய்தனர். அவரிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சத்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கியதால், வீட்டின் உரிமையாளர் அவரைக் கவனிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.