- Advertisement -
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதற்காக அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் , “மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்” என அறிஞர் அண்ணா பாணியில் பேசினார்.
- Advertisement -