Saturday, April 27, 2024 6:31 pm

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....

வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட முக்கிய தகவல்!

வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் – மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது. மேலும், மதுபோதையில் மனைவியுடன் சண்டையிட்ட கணவர், சக பயணிகளையும் அவதூறாகப் பேசியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது

அதேசமயம், நிலைமை கட்டுக்குள் வராததால், விமானத்தைப் பாகிஸ்தானில் தரையிறக்க விமானி முயன்றுள்ளார். ஆனால் அங்கே அனுமதியில்லாததால், டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கி கணவரை போலிசிடம் ஒப்படைத்துவிட்டு, விமானம் பாங்காங் புறப்பட்டது.

விமானம் டெல்லியில் தரையிறங்கியபோது, அக்கணவரை போலீசார் கைது செய்து, அவரை ஒரு சிறையில் அடைத்தனர். அவரது மனைவி பாங்காங் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து, விமான நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “விமானத்தில் பயணம் செய்த சக பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். இந்த சம்பவம் குறித்து, நாங்கள் போலீசாருடன் தொடர்புகொண்டுள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. குடிபோதையில் விமானத்தில் சண்டையிடுவது என்பது மிகவும் ஆபத்தான செயல். இது விமானத்தில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதிக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்