- Advertisement -
கப்பலோட்டிய தமிழன் வஉசியின் பிறந்தநாள் இன்று (செப்.5) தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இவருக்குப் பல தலைவர்கள் மலர்த்தூவி தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர், அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலை போரில் சிறையில் செக்கிழுத்ததும் வஉசிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு. இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறிய செய்வோம்” என்றார்.
- Advertisement -