- Advertisement -
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 5 நாள் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ள நிலையில் , எதற்காக இந்த கூட்டம் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், சில யூகங்கள் பரவி வருகின்றன. அதில் ஒன்று இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் காக்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக அண்ணாமலை அவர்கள், “நிறையக் கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். சுயநலவாதிகள், குடும்ப ஆட்சி செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள்தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாகச் செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. பத்திரிகையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் தான்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதைப்போல், பன்னீர் செல்வம் “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது” என்றிருக்கிறார்
- Advertisement -