- Advertisement -
தமிழகத்தின் வளிமண்டல மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப்.2) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
அதைப்போல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
- Advertisement -