- Advertisement -
இன்று உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடுமுறையில் பலரும் தங்களது குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.
அதன்படி, இந்த ஓணம் பண்டிகையை ஒட்டி பார்வையாளர்களுக்காகச் சென்னையில் உள்ள பிரபலமான வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் எனப் பூங்கா நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ஏனென்றால், வழக்கமாகச் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும் இந்த பூங்கா இன்று பண்டிகை காரணமாகத் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -