- Advertisement -
தமிழகத்தில் படிக்கும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த நடப்பு கல்வியாண்டிலிருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்கத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.
மேலும், இதற்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதில், 10,11,12ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -