- Advertisement -
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எழுதி இருந்தனர். இதையடுத்து, இந்த பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதியன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (ஆக.18) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அசல் சான்றிதழை மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -