- Advertisement -
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யக் கடந்த ஜூலை 14ம் தேதி ‘இஸ்ரோவால் சந்திரயான் 3 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது இந்த சந்திரயான் 3 விண்கலம் குறைந்த தூரத்தில் நிலவை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.17) சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இனி நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் அடுத்தக்கட்ட பணி, நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும், பின்னர் வருகின்ற ஆகஸ்ட் 24 ஆம் தேதியில் நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- Advertisement -