- Advertisement -
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படம் வைத்து வணங்கலாம். பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும். அதைப்போல், லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
மேலும், சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராஜரைத் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமையை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும். இந்த அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படத்தை நம் வீட்டில் வைத்து வழிபட வேண்டியது அவசியம். இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
- Advertisement -