- Advertisement -
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். ஆனால், அந்த 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் விரக்தியிலிருந்த ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் (ஆக .12) தற்கொலை செய்து கொண்டார். அப்போது, மகனின் சாவுக்கு நீட் தேர்வுதான் காரணம் எனப் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மகன் இறந்த துக்கம் தாளாத செல்வம் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் தனது மனைவியைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -