- Advertisement -
நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனை தொடர்ந்து, அவரது தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ” ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை” என்றார்.
மேலும், அவர் ” இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது, நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்துப் போடமாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். ஆகவே, மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
- Advertisement -