கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஒன்றாக இணைந்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் அவர்கள், ” கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது. விசுவாசம் என்றால் என்ன என்பது அதிமுக அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள்; அச்சாணி முறிந்து போனவர்கள்; டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள் என அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பேசியதை குறிப்பட்டார்”.
மேலும், அவர் ” எடப்பாடி குய்ப்பிட்டதை போல் நாங்கள் இருவரும் இணைந்து இருப்பது சுயநலத்திற்காக அல்ல. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை இன்று துரோகத்தால், ஒருசிலர் அபகரித்திருக்கிறார்கள். அதை மீட்டு தொண்டர்களின் கையில் கொடுப்பதற்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். எங்களுக்கு டெண்டர் ஆசையில்லை. சந்திலே சிந்து பாட ஆசையில்லை. ஊழல் செய்வதில் நம்பிக்கையில்லை” என டிடிவி.தினகரன் பேசி வருகிறார்