மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தால் அங்கு பலரும் தங்களது உடமைகளை இழந்து வருகின்றனர். அதன்படி, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அது, தற்போது ரூ. 10 கோடி மதிப்புள்ள படுக்கை விரிப்புகள், கொசு வலைகள், அத்தியாவசிய மருந்துகள், பால் பவுடர் உள்ளிட்ட பல நிவாரணப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது எனவும், அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கக் கோரி மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், அவர் ” மணிப்பூரில் தேவைப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மணிப்பூரில் உள்ள தமிழர்கள் உயிருக்கும், உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்