கடலூரில் நடைபெற்ற என்எல்சி விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாமகவினர் காவலர்கள் மீது கற்களை வீசியதால் கூட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
மேலும் தடியடி நடத்தியும் , தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில், இந்த கலவரத்தில் காவலர்கள் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த பதற்றமான சூழ்நிலை கட்டுப்படுத்த மண்டல காவல்துறை ஐ.ஜி. கண்ணன் சம்பவ இடத்திற்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -