கடலூரில் மாவட்டத்தில் ஊக்க நெய்வேலியில் என்எல்சி விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர் அங்குள்ள காவலர்கள் மீது கற்களை வீசியதால் அங்குப் போராட்ட களமாக மாறியது.
இதனால் போராட்டக்காரர்களை வஜ்ரா வாகனம் மூலம் விரட்டி அடித்தனர். மேலும், அங்குத் தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
- Advertisement -