ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பயலும் மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு தேர்ச்சி பெற்று வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி அரசிடம் கடந்த சில நாட்களாகவே அங்கு நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது, புதுச்சேரி திமுகவின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து கோரிக்கை ஏற்று, இனி புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்ததை இருந்தே இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -