கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை சீசனால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டமான கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது நீலகிரியில் தொடர்ந்து கனமழை எதிரொலியால், 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (ஜூலை 6) நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நேற்று (ஜூலை 5) அதிகபட்சமாக 18 செமீ மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -