அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு குறித்து விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. முதல் நீதிபதி அமைச்சரைக் கைது செய்தது சட்டவிரோதம் என்றார். மற்றொரு நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும், அமைச்சரைக் கைது செய்து விசாரிக்கவும் தீர்ப்பளித்தார்.
இதன் காரணமாக , இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று (ஜூலை 4) அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயனை 3வது நீதிபதியாக நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -