கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஜூலை 3) முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 4) அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இந்த மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்துப் பேச டில்லி புறப்பட்டுச் செல்கிறார். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ” காவிரி நடுவர் மன்ற உத்தரவிலோ, உச்சநீதிமன்ற உத்தரவிலோ மேகதாது என்ற வார்த்தையே கிடையாது” என டெல்லி புறப்படுவதற்கு முன் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -