தமிழகத்தின் தலைநகரான சென்னையில் திடீரென சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை, ஜூன் 19) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
அதைப்போல், சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் விடிய விடியக் கனமழை கொட்டி தீர்ப்பதால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -