அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 13) அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊழல் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக பாஜக அண்ணாமலை கடும் விமர்சனம் செய்ததை எதிர்த்து கண்டனம் தீர்மானத்தை நிறைவேற்றியதாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நிலையில், இந்த அதிமுக செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் முன்னே இந்த கண்டன தீர்மானத்தை வாசித்தார். அதில், ” இந்தியாவில் முதன்முதலாக பாஜக ஆட்சியமைக்க உதவியவர் ஜெயலலிதா. இந்த 20 ஆண்டுகளாகச் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத பாஜகவுக்கு, 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுக்கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான். பொதுவெளியில் எந்த விதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளார்” என அதிமுக சார்பில் இவ்வாறு கண்டன தீர்மானத்தை வாசித்தார்.
- Advertisement -