தமிழகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூன் 13) நடைபெற்று வந்தது. இந்நிலையில், இக்கூட்டத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதாகத் தகவல் வந்தது.
இதையடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு முன்பாக கண்டன தீர்மானத்தை வாசித்தும் காட்டினார் எடப்பாடி பழனிசாமி
- Advertisement -