தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு செய்யப்பட்டு பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 200 கி.மீ தூரம் வரை செல்லும் அரசு பேருந்துகளிலும் இனி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் பயணிகள் வேறு மாவட்டத்திற்குச் செல்ல இன்று (ஜூன் 7) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் , பயணிகள் வழக்கமாக முன்பதிவு செய்யும் தளமான tnstc.in மற்றும் “tnstc mobile app” மூலம் இந்த வசதி பயணிகளின் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- Advertisement -