தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்போவதாக அக்கட்சி அறிவித்திருந்தது
இந்நிலையில், தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வரும் ஜூன் 17 ஆம் தேதியில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கவுள்ளார் நடிகர் விஜய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இந்த விழா நீலாங்கரையில் உள்ள RK Convention Centre-ல் நடைபெறும் எனத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- Advertisement -