தமிழகத்தின் நிதியமைச்சரான தென்னரசு சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அதில், ” 2021-22ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இது 2022-23-ல் 7 லட்சமாக நிறுவனங்கள் தற்போது உயர்ந்துள்ளது. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் சில நாட்களுக்கு முன் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துரையாடலில் தமிழக அரசு குறித்து கடும் விமர்சனம் வைத்ததைக் குறிப்பிட்டு எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டுப் பேசுகிறார் எனத் தெரியவில்லை” என்றார்.
அதைப்போல், “சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் கூறியதற்கு மாறாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டுள்ளார், உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, ஆளுநர் தனது அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளார்” எனக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
- Advertisement -